Thinnai Study Circle
இரக்கமும் கருணையும் இருகண்களாகட்டும்!
இதழ்கள் இரண்டிலும் புன்னகை மலரட்டும்!
உழைப்பும், உறுதியும் இருதோள்களாகட்டும்!
நேர்மை ஒன்றையே நெஞ்சம் தாங்கட்டும்!
இடதும் வலதும் இணைந்த கரங்களாகட்டும்!
இதயம் என்றும் அன்பால் துடிக்கட்டும்!
தடைகளைத் தாண்டி கால்கள் ஓடட்டும்!
கொட்டும் வியர்வையே மூலதனமாகட்டும்!
சாதி மதம் பேதம் ஒழிப்போம்!
பதவி பணம் தரும் கர்வம் தவிர்ப்போம்!
லட்சியம் விதைத்து வெற்றியை அடைந்து!
லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து!
அறத்தின் வழிநின்று மனிதம் போற்று!
“ஏழ்மையும் அறியாமையும் கனவுகளை அழித்துவிட அனுமதியோம்”
எனும் உயர்ந்த இலக்குடன் தேனியில் திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை செயல்பட்டுவருகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் நுழைவுத்தேர்வு சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்குதல், உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்குதல் இளைஞர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கும் வழிகாட்டுதல் மற்றும் சேவை நோக்கத்துடன் பயிற்சி வழங்குதல் ஆகிய பணிகளைச் செய்துவருகிறோம். திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை ஓர் பதிவு பெற்ற அமைப்பாகும். (பதிவெண்: 87/4/2014)
திண்ணை பயிற்சிப் பட்டறை
மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் TNSPC, TNUSRB, TET, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 2013-ம் ஆண்டு முதல் இதுவரை 18 பயிற்சிப்பட்டறைகள் மூலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை உருவாக்கியுள்ளோம். இவர்கள் அனைவரும் நேர்மையான அரசு அலுவலர்களாகப் பணியாற்றி வருவதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.